Sunday 22 September 2013

கொங்கு கல்யாணத்தில் புலவனார்கள்

புலவனார்கள் என்போர் கொங்கு நாட்டுக்கு வந்ததும் கொங்கு சமூகத்தில் அவர்களின் பங்கும் குறிப்பிட தகுந்ததாகும். காவிரியில் வெள்ளம் தீர்த்த கம்பருக்கு நன்றிக்கடனாக கொங்கு மக்கள் திருமண வரியாக சோழனுக்கு தர வேண்டிய வதுகை வரியை கம்பருக்கு தர சோழன் ஆவண செய்தான். மேலும் கம்பருக்கு தந்த வாக்குப்படி, புலவனார் என்னும் வம்சத்தை கொங்கு நாட்டில் குடியமர்த்தி நம் குடிபடைகளோடு அவர்களையும் போற்றி காத்து வந்தோம். புலவனார்களே அக்கால திண்ணைப்பள்ளி ஆசிரியர்கள். மக்கள் தவறு செய்யும் போது அதை இடித்துரைத்து திருத்துவதும், கவி எழுதுவதும் இவர்கள் தொழில்.

புலவனார் பற்றி மேலும் அறிய இங்கு கிளிக் செய்யவும்.

கொங்கு திருமணத்தில் புலவனார் பங்கு முக்கியமானது. முதலில் மாப்பிள்ளை அழைப்பின் போது அவர் முன்னாள் பாட்டு பாடி செல்வார். காணி புலவனார் வரவழைக்கப்பட்டு அவர் புலவனார் வாழ்த்து ஏர் எழுபது பாடி மணமக்களை வாழ்த்துவார். பின்னர் பால் அருந்தி பழம் சாப்பிட்டு செல்வார்.

சேலம் மாவட்ட வெள்ளைக்கார கலக்டர் புலவனார் பற்றி எழுதிய குறிப்பு,



மங்கல வாழ்த்திலும் புலவனார் பற்றிய குறிப்புகள் உள்ளது,

"கற்றோர் புலவர் கணக்கரை அழைத்துத்
தேம்பனை யோலை சிறக்கவே வாரித்"


"பட்டன் புலவன் பண்பாடி தக்கைகொட்டி
திட்டமாஞ் சோபனஞ் செப்பிமுன் னேவர"


"வாழிப் புலவர்க்கு வரிசைதனைக் கொடுத்துத்"

 இன்றும் பாரம்பரியம் உள்ள கொங்கு குடும்பங்கள் தங்கள் காணி புலவரை வரவழைத்து கல்யாணத்தில் பங்கு பெற செய்கிறார்கள். புலவனார் பார்மபரியம் அறிந்து கொண்டு பலரும் தங்கள் புலவனாரை தேடி கல்யாணத்தில் பங்கு பெற செய்கிறார்கள்.

புலவனார் வாழ்த்து பாடல்:







No comments:

Post a Comment